2025 மே 19, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கேரள கஞ்சாவுடன் கைதான இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இச்சந்தேக நபர்களிடம் கஞ்சா இருப்பதாக அம்பாறை மாவட்ட போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (10) மாலை நடத்திய சுற்றிவளைப்பின்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் 3.9 கிராம் கேரள கஞ்சாவுடன் 26 வயதுடைய ஒருவரையும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 24.5 கிராம் கேரள கஞ்சாவுடன் 27 வயதுடைய ஒருவரையும் கைதுசெய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X