2025 மே 21, புதன்கிழமை

குழாய்க்கிணறு நீர்விநியோகத் திட்டத்தின் மூலம் 6,500 குடும்பங்களுக்கு நன்மை

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குழாய்க் கிணறு நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் சுமார் 6,500 குடும்பங்கள் நன்மை அடைந்து வருவதாக அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்  முதற்கட்டமாக 116 மில்லியன் ரூபாய் செலவில் குழாய்க் கிணறு நீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த மூன்றாம் திகதி இந்தக் குடிநீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X