Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 30 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு கஞ்சா சுருட்டுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனைக் கடற்கரைப் பள்ளி வீதியிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் மறைவாக இருந்து கஞ்சா சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 18 வயது மற்றும் 19 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகப் பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்கள், பாழடைந்த கட்டடத்தில் மறைவாக ஒழிந்திருந்து கஞ்சா பாவிக்கிறார்கள் என்று பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது இருவர் தலா ஒவ்வொரு கஞ்சா சுருட்டுடன் கைதுசெய்யப்பட்ட அதேவேளை மேலும் இருவர் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பொலிஸாரின் பணிப்பின் பேரில் கல்முனைப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸாரும் கல்முனைப் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இது பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
38 minute ago