2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நலினி கந்தசாமி இன்று (07) வியாழக்கிழமை விதித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணையை அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நலினி கந்தசாமி முன்னிலையில் இன்று (07) எடுத்துக் கொள்ளப்பட்ட போது 7,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

இதேவேளை, கட்டாக்காலி மாடுகளை வீதியில் விட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X