2025 ஜூலை 09, புதன்கிழமை

கல்முனை பொதுச்சந்தையில் நடமாடிய 20 மாடுகள்

Niroshini   / 2015 நவம்பர் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றும் நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை பொதுச் சந்தையில் நடமாடிய 20 மாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாநகர சபையினால் அதிரடியாக கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மாடுகள் யாவும் ஏலவே அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ஒரு மாட்டுக்கு 2,000 ரூபாய் வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு நாளை திங்கட்கிழமை விடுவிக்கப்படும் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும் இம்மாடுகளை தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் நீதிமன்ற அனுமதியுடன் அவை அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள். பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களினால் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. இதனால் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநகர முதல்வர் ஆலோசனை வழங்கியிருந்தார் என ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .