Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை, கல்முனை மாநகர பிரதான பஸ் நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்துக்காக 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண சபை முன்வந்துள்ளதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு, திங்கட்கிழமை (11) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
பயணிகளின் நன்மை கருதி கல்முனை பிரதான பஸ் நிலையத்துடன் தனியார் பஸ் சேவை ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டுள்ளதால், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு அசௌகரியங்களும் காணப்படுகின்றன.
ஆகையால், அந்த பஸ் நிலைய வளாகத்தை விஸ்தரிப்புச் செய்து அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு மாகாண சபை நிதியொதுக்கீட்டை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago