2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காரில் கஜமுத்துகளை கடத்திய இருவர் கைது

Editorial   / 2022 ஜனவரி 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை,  அம்பாறை நகர் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (06)  கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அம்பாறை - கண்டி வீதியின் புத்தங்கல  பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, அம்பாறை நோக்கிப் பயணித்த  காரை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த காரில் 3 கஜமுத்துகளை கடத்திவந்த இருவரையும் கைது செய்ததுடன், கஜமுத்து மற்றும் காரையும் அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .