2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சின்னப்பாலமுனை வீதியை புனரமைக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாலமுனை கடற்கரை பிரதான வீதி சேதமடைந்து காணப்படுவதினால், போக்குவரத்துச் செய்வதில் சிரமம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, இந்த வீதியை புனரமைத்துத் தருமாறு  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை உள்ளிட்ட கிராம மக்கள், இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வீதிப் புனரமைப்பு தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவிடம் நேற்று வியாழக்கிழமை கேட்டபோது, இந்த வீதியை கூடிய விரைவில் புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .