2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சீமெந்து வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,ஐ.ஏ.ஸிறாஜ்,ஏ.ஜி.ஏ.கபூர்

அக்கரைப்பற்று மற்றும் கல்முனைப் பகுதிகளைச் சேர்ந்த 122 பயனாளிகளுக்கு  இன்று வியாழக்கிழமை சீமெந்து பக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட 57 பயனாளிகளுக்கு  சீமெந்து பக்கெட்டுகள்
அப்பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் வைத்து  வழங்கப்பட்டன.

இதேவேளை, கல்முனையில் 65 பயனாளிகளுக்கு சீமெந்து பக்கெட்டுகள் அப்பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.  

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 பயனாளிகளின் வீட்டுப் பூச்சு வேலைக்காக தலா பயனாளிக்கு 10 சீமெந்து பக்கெட்டுகள் படி வழங்கப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .