2025 மே 21, புதன்கிழமை

சாராயம் விற்ற குடும்பஸ்தர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 03 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 52 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சட்டவிரோத சாராய விற்பனை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சாராயம் விற்பனை செய்யும் இடத்துக்கு புலனாய்வுப் பொலிஸார் சென்று சோதனை மேற்கொண்டு  180 மில்லிலீற்றர் சாராயத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .