2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சிறுநீரகங்கள் பாதிப்பு; உதவுமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் தேவ கிராமத்தை (அளிக்கம்பை)  பிறப்பிடமாகவும் கொண்ட மோட்டார் வாகன திருத்துனரான சுதர்சன் என்று அழைக்கப்படும் கந்தசாமி, 2 மற்றும் 5 வயது இரு குழந்தைகளின் தந்தையாவார். 

இவருக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்ட்ட நிலையில் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு தற்போது மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு கருணையுள்ளம் கொண்டவர்கள் ஒரு சிறுநீரகம் தந்துதவுமாறு (O Group) கோரியுள்ளார். 

இல்லாது விடின் சிறுநீரகம் தருபவர்களுக்கு (சுமார் 20 இலட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளது) இவ்வளவு பெருந்தொகையினை உடனடியாக சேர்க்க வேண்டியுள்ளது.

அத்துடன், பின்தங்கிய கிராமத்தில் மிகவும் ஏழையாக வாழ்கின்ற எங்கள் குடும்பத்துக்கு உங்களால் முடிந்த உதவியினை சுதர்சனின் மனைவியான தா.வி.இன்பமலர் (ஹற்றன் நெஷனல் வங்கி இல: 078020156029)  என்ற இலக்கத்துக்கு அனுப்புமாறும் அல்லது மேலதிக தகவலுக்கு அலைபேசி எண் 0770520252 எனும் இலக்கத்துடன், தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X