2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவர் விபத்துக்களை குறைக்கும் செயற்றிட்டம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்தில் சமூகமட்ட சிறுவர் விபத்துக்களை குறைக்கும் செயற்றிட்டத்தை சர்வோதயம் மற்றும் யுனிசெப் நிறுவனங்கள் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இச்செயற்றிட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும்  ஐக்கிய நாடுகள், உலக வங்கி ஆகியவற்றின் உதவியுடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்களுக்கு, விளிப்பூட்டும் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (02) அல்-ஹிதாயா மகா வித்தியால அதிபர் எம்.எல்.பதீயுத்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது விபத்துக்கள் தொடர்பாக அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஏ.எம்.பாரிஸ் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விபத்துக்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .