Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 02 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருதில் 900 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 41 வயதான குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாயக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சந்தேகநபர் நடமாடும் இடத்துக்குச் சென்ற புலனாய்வுப் பொலிஸார் சிகரெட்டுக்களுடன் அவரைக் கைதுசெய்தனர்.
இதேவேளை, 3180 மில்லிலீற்றர் சாராத்தைச் சட்ட விரோதமாக தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் 52 வயது குடும்பஸ்தர் ஒருவர் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனையில் வைத்து நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .