2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக பசுமாடுகளை கொண்டுசென்ற இருவர் கைது

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று ஊடாக அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இரு பசுமாடுகளை சிறியரக லொறியில் ஏற்றிச் சென்ற இருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அக்கரைப்பற்று பதுர்நகர் பிரதேசத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.

இதன்போது இரு பசுமாடுகளையும் லொறியையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்,வினாயகபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 27,47 வயதுடையவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X