2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 5 பேர் கைது

Gavitha   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐந்து பேரை கைது சனிக்கிழமை (02) கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார்  தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமை காரியாலய புலனாய்வு உத்தியோகத்தர்களும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளிக்கம்பை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ; 4 பேரும் வீதி மின் கம்பங்களில் வயர்களை பொருத்தி தங்களது வீட்டுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மற்றைய நபர், வீட்டு மின் வாசிப்பு மானியில் குளறுபடி செய்து மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்களிடமிருந்து வயர்கள், மின்குமிழ்கள் மற்றும் மின் ஆழிகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X