2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பாயாஸ் றஸாக், நேற்று செவ்வாய்க்கிழமை (07) விதித்துள்ளார்.
 
இலங்கை மின்சார சபை தலைமைக் காரியாலய புலனாய்வு பிரிவினரும் சவளக்கடை பொலிஸாரும் இணைந்து கடந்த சனிக்கிழமை (04) மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமாக தமது வீட்டுக்கு மின்சாரம் பெற்று வந்த நபர்கள்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
 
இவ் வழக்கு விசாரணை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் நேற்று (07) எடுத்துக்கொள்ளப்பட்ட பொது தலா 10 ஆயிரம் ரூபாய் அபாதம் விதித்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டஈடான 11 ஆயிரத்தி 300 ரூபாவை ஒருவரும், மற்றைய நபர் 05 ஆயிரத்தி 600 ரூபாவையும் இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X