Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2021 ஜூன் 11 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலப் பிரிவில் சிறுவர் உட்பட 10 பேர் கொரோனா தொற்றாளராக இனங் காணப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் இன்று (11) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 10 பேர் கொரோனா தொற்றாளராக இனங் காணப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை எமது பிரிவில் 160 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டு தற்போது, 21 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், 4 பேர் மரணித்துள்ளதுடன், 37 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வீடுகளில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago