2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தடை சிகரெட்டுக்கு ரூ.10,000 அபராதம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட டொப் ரக சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல், நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து செவ்வாய்க்கிழமை (10) குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது மேற்படி அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .