Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற இலங்கை முஸ்லிம் அறிஞரும் பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம். ஜமீலில் நினைவு தின உரையும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் புதன்கிழமை(04) பி.ப 2 மணிக்கு இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில்நடைபெறவுள்ளது.
இஸ்லாமியக் கற்கை அரபுமொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது,பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், அறிஞர் ஜமீல் பற்றிய நினைவுரையையும் அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீனும் வழங்கவுள்ளனர்.
இதேவேளை,தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூல் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிஞர் ஜமீலின் நூல்கள் தொகுப்புக்கள், அன்னாரின் வாழ்க்கை, வரலாறு, உரைகள் அடங்கிய கண்காட்சியும் நூல் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago