2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 06 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, தமண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த தஷ்லிம் அப்ரி;த் (வயது 16)  என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இம்மாணவன், அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில்  தரம்-10 இல் கற்று வந்தவர்.

இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மாணவனும் அவரது நண்பர்களும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து வவாங்காமம் பிரதேசத்துக்கு சென்றுள்ளனார். இந்நிலையில், அங்குள்ள ஆற்றில் இவர்கள்  குளித்துக்கொண்டிருந்தனர். இதன்போதே மேற்படி மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X