2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஐவர் உட்பட அறுவர் கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எப்.முபாரக்    

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று  பிரதேசங்களில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஐவர் உட்பட அறுவரை, நேற்று வியாழக்கிழமை (28) இரவு கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பதூர்நகர் பிரதேசத்திலுள்ள வீட்டை நேற்று மாலை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய போது அலுமாரியில் மறைத்து வைத்திருந்த 15 கிராம் கஞ்சாவை மீட்கப்பட்டதுடன், 26 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் வெளிவந்து நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவந்த ஐவரை, நேற்று (28) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X