2025 ஜூலை 09, புதன்கிழமை

புடைவை விற்ற இந்தியப் பெண் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து கல்முனை, பாண்டிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியப் பெண்ணொருவர், இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த 31 வயதான எஸ்.இராஜேஸ்வரி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .