2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழா

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா, இன்று சனிக்கிழமை (19) ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் 07 வருடங்கள் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுத் 30 மௌலவியாக்களுக்கு 'மௌலவியா, ஹாபிளா' பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அரபுக் கல்லூரித் தலைவரும் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம்.பி.முகைதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் அல்ஹாபீஸ்.என்.எம்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எஸ்.எம்.அலியார் மௌலவி, காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ஏ.எம.அப்துல் காதர் மௌலவி, உலமாப் பெருமக்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .