2025 ஜூன் 25, புதன்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் தரம் 4 பிரிவு மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சதா வேக்சொப்பின் அணுசரனையில் பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருக்கிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .