2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, மஜீட்புரம் கிராமத்தில்; பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்  மக்களின் பாவனைக்கு ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கையளிக்கப்பட்டன.

தனித்துவிடப்பட்ட மற்றும் பின்தங்கிய 10 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் கீழ், 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்தேவைக் கட்டடம் மற்றும் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 10 இலட்சம் ரூபாய் செலவில் செய்துமுடிக்கப்பட்ட பாடசாலை மத்திய வீதிக்கான மதகு மற்றும் வடிகான் ஆகியனவே கையளிக்கப்பட்டன.

இதன்போது, மஜீட்புரம் ஜும்மாப் பள்ளிவாசல் புனரமைப்புக்காக காசோலையும் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X