2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய மூவர் கைது

Janu   / 2025 ஜனவரி 27 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீகவாபி வெஹரகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தேரர் ஒருவர்  உட்பட மூன்று பேர் எரகம பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.   

கைது செய்யப்பட்ட தேரர் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் எனவும்  ஏனைய சந்தேக நபர்கள் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்  தெரியவந்துள்ளது.

மேலும்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .