2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மு.கா மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்வார்

Niroshini   / 2016 ஜனவரி 13 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய  மாநாட்டில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக  முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகார செயலாளரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.

பாலமுனையில் இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மாட்டில், ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

மாநாட்டுக்குரிய சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதுடன் அதற்கான உயர் மட்டக் குழுவும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால்  நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தேசிய மாநாட்டுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள கட்சியின் மாநாட்டுக்குழுவின் அடுத்த கூட்டம், மிக விரைவில் அம்பாறையில் இடம்பெறவுள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X