2025 மே 19, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி மீது தென்னைமரம் விழுந்ததில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா,வி.சுகிர்தகுமார்,எஸ்.கார்த்திகேசு, என்.ஹரன்,எஸ்.ஜமால்டீன்,பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, திருக்கோவில் தம்பட்டைப் பிரதேசத்தில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றின் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் விநாயகபுரம் 02ஆம் பிரிவைச் சேர்ந்த சிவகுமார்  வினோஜன் (வயது 21) என்பவரே பலியாகியுள்ளார். இதேவேளை, விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான ம.தேவதர்ஸன் (வயது 20), மோ.சுரேஸ் (வயது 19), வி.அரவிந்தன், (வயது18) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றுப் பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 04 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது, திடீரென்று  பலத்த காற்று வீசியதால், இத்தென்னைமரம் குறித்த  முச்சக்கரவண்டி மீது முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X