2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மாநாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்;தர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான வருடாந்த மாநாடு, அம்பாறை நகர மண்டபத்தில் நாளை  வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்;தர் சங்கத்தின் உபதலைவர் ஐ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.

அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் இஸ்திரி கமகே தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்;தர்களினதும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர்களினதும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பற்றி கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு அதன் திணைக்களத்தினால் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X