2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மீன்சந்தையை பாவனைக்கு விடுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் - தம்பிலுவில் பொதுச்சந்தைக் கட்டடத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீன்சந்தை கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டபோதிலும், தங்களின் பயன்பாட்டுக்கு இதுவரையில் கையளிக்கப்படவில்லையென மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த சந்தைக் கட்டடத்தொகுதியானது சுமார் 67 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த மீன்சந்தையை பாவனைக்கு விடாமையினால், நடைபாதையில் வைத்தே தாம் மீன்களை விற்பனை செய்வதாகவும் மீன் வியாபாரிகள் கூறினர்.

நடைபாதையில் வைத்து மீன்களை விற்பனை செய்ய வேண்டாமென்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பொலிஸாரும் தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், தங்களுக்கு மீன்சந்தை இல்லாமையினால் நடைபாதையில் வைத்து மீன்களை விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

இது தொடர்பில் திருக்கோவில் பிரதேச சபை அதிகாரிகளுக்கும்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரனும் தெரியப்படுத்தியபோதிலும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த மீன்சந்தையை தங்களின் பாவனைக்கு கையளிக்குமாறும் மீன் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மீன்சந்தை பாவனைக்கு கையளிக்காமை தொடர்பில் திருக்கோவில் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.ஏ.சில்வஸ்டரிடம் கேட்டபோது, 'எதிர்வரும் வாரம் இந்த மீன்சந்தையைக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X