2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 29 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள மரண கண்டி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற திருக்கோவில் -04ஆம் கிராம அலுவலர்  பிரிவில் வசிக்கும் 05 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் வனராஜ் (வயது 58) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆற்றில் மீன்பிடிப்பதற்காக தனது வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (29) மாலை குறித்த மீனவர் சென்றுள்ளார். இதன்போது, மறுகரையில் இருந்த தோணியை எடுப்பதற்காக நீந்திச் சென்றபோதே, இவர் நீரில் மூழ்கியுள்ளார்.  

இது தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர்

இதனை அடுத்து, ஏனைய மீனவர்களின் உதவியுடன் பொலிஸார் குறித்த  மீனவரைத் தேடியபோது, விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவிலை அண்டிய ஆற்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X