2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மகளைக் கொலை செய்த தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 14 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தனது வளர்ப்பு மகளை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தாயின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.  

கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இவரை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் விளக்கமறியிலில்; வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை, மத்தியமுகாம் ஆறாம் பிரிவு 11ஆம் கொலனியில் தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வீட்டின் பின்புறுத்தில் புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அம்மகளின் தாய் (வயது 55) கடந்த இரண்டாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

ஐந்து பிள்ளைகளின் இத்தாய், இவரின் ஐந்தாவது பிள்ளையான ஜனனியை கல்முனை வைத்தியசாலையில் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இம்மகள் திருமணமாகி கணவரின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இம்மகளின் கணவர் வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில் இந்துமதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு தனது மகள் மாறியுள்ளமை தொடர்பில் தாய் கேள்விப்பட்டுள்ளார்.

இவ்வாறிருக்கையில், கடந்த 31ஆம் திகதி தனது தாயின் வீட்டில் தங்கிவிட்டு வருவதற்காக மகள் சென்றுள்ளார். அவ்வீட்டில் தனிமையில் வசித்துவந்த தாய்க்கும் மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மகளைக் காணவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணை மேற்கொண்டபோது, தாய் தனது மகளைக் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்தமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அத்தாய் கைதுசெய்யப்பட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X