Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் மனைவியை தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான கணவனை, மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றது.
இவர்கள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இக்கொலைக்குக் காரணம் என விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.
காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.
சந்தேகத்தின் பேரில் இப்பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மீண்டும் ஆஜர்செய்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago