2025 ஜூன் 25, புதன்கிழமை

விநாயகபுரம் இறங்குதுறைப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தங்களின் மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு போதிய இடம் இல்லாமை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தாம் சிரமப்பட்டு வருவதாக  விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் -04 இறங்குதுறைப் பகுதியை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில், 2012ஆம் ஆண்டு அந்த இடத்தைச் சுற்றி முள்வேலி அமைத்ததுடன், தென்னங்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. எனவே, இறங்குதுறையாகப் பயன்படுத்திவந்த இப்பகுதியில் தங்களின் மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு போதிய இடம் இல்லாமலுள்ளதாகவும்  தெரிவித்த மீனவர்கள், இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் கூறினார்.

விநாயகபுரம் கிராமத்தில் 350 க்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுமார் 50 க்கும் மேற்பட்ட வள்ளங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.   

இந்த மீனவர்களின் இறங்குதுறைப் பிரச்சினை தொடர்பில் கல்முனை கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுலைமானிடம் செவ்வாய்க்கிழமை கேட்டபோது, 'மீனவர்களின் உரிமை எதுவோ அதைப்  பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விநாயகபுரம்-04 ஆழ்கடல் மீன்பிடி இறங்குதுறை சம்பந்தமாக கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களும் திருக்கோவில் பிரதேச செயலாளரும் எமக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்த மீனவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .