2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாணமை -உகந்தைமலை வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை  முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டிச் சாரதி பலியாகியுள்ளார்.

இராணுவ வீரரான பாணாமையைச் சேர்ந்த குணரத்ன  சுனில் (வயது 30) என்பவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

பாணமை நகரிலிருந்து வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X