2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்; சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 13 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஜோசப் ஜோன் (60 வயது) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் சென்றுகொண்டிருந்த சைக்கிளுக்கு பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இதன்போது சைக்கிளில் சென்றவரே படுகாயமடைந்துள்ளார்.

இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பின்னர்  மேலதிகச் சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X