2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியத்தீவு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர்; பலியானதுடன், இருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மல்லிகைத்தீவைச் சேர்ந்த யோகராசா மனோ (16வயது)  என்பவரே பலியாகியுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில்; ஒருவர் அண்மையிலேயே வெளிநாடென்றில் தொழில் புரிந்து விட்டு நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X