2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் சிறுவன் காயம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. சுகிர்தகுமார்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த 13 வயதுடைய சிறுவன், அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் செலுத்திச் சென்ற துவிச்சக்கர வண்டி மீது 21 வயதுடைய இளைஞன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனும் காயமடைந்த நிலையில் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டு, பின்னர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன், திருக்கோவில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X