2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் காயம்

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுலைமான் றாபி, எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (09) காலை  08.30க்கு இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமுற்ற மீனவர் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் மோட்டார் சைக்கிளும் குறித்த மீனவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தால் மீனவரின் மோட்டார் சைக்கிளும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X