2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வசதி கோரி பிரேரணை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தைக் கோரும் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு,  மாநகர சபா மண்டபத்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே மேற்படி பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

மேலும், புதிய மாநகரசபை உறுப்பினர் கே.ஏகாம்பரம்  அன்றையதினம் கன்னி உரை ஆற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X