2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விழிப்பூட்டல் செயலமர்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்
 

பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீட்டு முகாமைத்துவமும் குடும்ப அபிவிருத்தியும்' எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் செயலமர்வு இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன், சமுக அபிவிருத்தி உதவியாளர் மற்றும் திவிநெகும முகாமையாளர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 
இதன் போது அம்பாறை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி ஜனாபா.எஸ்.எம்.ஹபிசா
யாசீர் கலந்து கொண்ட பெண்களுக்கான விழிப்புணர்வு விரிவுரையை நடத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .