Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனங்களுக்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின்போது, கல்வித்தகைமை மற்றும் தொழில்த் தகைமை பற்றிய வேறுபாடு தெரியாமல் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு தான் இன்று திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகள் தொடர்பான புள்ளித்திட்டத்தில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன. ஆணைக்குழுவின் செயலாளரினால் தயாரிக்கப்பட்ட புள்ளித்திட்டத்துக்கு பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களும் அங்கிகாரம் வழங்கியுள்ளனர்' என்றார்.
'இந்த புள்ளித்திட்டத்தில் கல்வித்தகைமை என்ற தலைப்பின் கீழ், கல்வி முதுமானி அல்லது முதுதத்துவமானி பட்டங்களுக்கு 10 புள்ளிகளும் பட்டப்பின் டிப்ளோமாவுக்கு 8 புள்ளிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டப்பின் டிப்ளோமா என்பது தொழில்த் தகைமை எனத் தெரியாத நிலையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, ஆரம்பப் பட்டத்துக்கு புள்ளிகள் வழங்கப்பட்ட பின்னரே, பட்ட மேல் பட்டங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என்றும்; தெரியாத நிலையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
'மேலும், இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்புக்கு 10 புள்ளிகளும் இரண்டாம் வகுப்புக்கு 5 புள்ளிகளும் மூன்றாம் வகுப்புக்கு 3 புள்ளிகளும் பொதுவாக வழங்கப்படுகின்றது. ஆனால், இப்புள்ளித்திட்டத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் ஒருவரின் மொத்தச் சேவைக் காலத்துக்கு புள்ளிகள் வழங்கும் நடைமுறை பேணப்படவில்லை
ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படும் புள்ளித்திட்டத்துக்கு முரணான வகையில், கிழக்கு மாகாணத்தில்; நடைமுறைச் சாத்தியமற்ற புள்ளித்திட்டம் பயன்படுத்தப்பட்டு, பல சிரேஷ்ட உத்தியோகஸ்தர்கள் புறக்கணிக்கப்பட்டும் கனிஷ்ட தரங்களை சேர்ந்தோர் கடந்த காலத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டும் உள்ளனர்.
இம்மாகாணத்தில் தற்போது சேவையிலுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகஸ்தர்களில் எத்தனை பேர் கல்வி முதுமானி, முதுதத்துவமானி பட்டங்களைக் கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறி. இவற்றைக் கற்கும் வாய்ப்புகளை கல்வி அமைச்சு வழங்குவதில்லை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இந்நிலையில், இவ்வாறான பட்டங்களை வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கோரியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், இது தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago