2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாம் உலகப் போர் மூண்டால் பிச்சையெடுக்கும் நிலை உருவாகும்

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்கத் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மூன்றாம் உலகப் போருக்கான தீக்குச்சி கொளுத்தப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இதனால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மிக வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.

ஹமாஸ் ஏற்கனவே ஈரானுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஏமனில் உள்ள ஹவுத்திகளும் ஈரானை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன. 
ஈரான் மீது போர் தொடுக்கப்படுமாயின் நாங்களும் இறங்குவோமென சீனாவும் ரஷ்யாவும் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளது. எனினும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஏற்படுவதை தடுத்த அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால் ட்ரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்கவேண்டுமென வலியுறுத்தியும் உள்ளது.

மூன்றாம் உலகப் போர் தொடங்கினால். எரிபொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரிக்கும். உணவுப் பொருட்களின் விலைகள் எகிறும். சில நாடுகள் பட்டினி சாவை எதிர்நோக்கவேண்டிய நிலைமை ஏற்படும். வேலைவாய்ப்புகள் குறையும். போதியளவான வருமானத்தை எந்தத் துறையில் இருந்தும் எதிர்பார்க்கமுடியாது. ஏற்றுமதி வருமான குறையும்.   நாம் உணவுக்காகப் பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. முதலில் அவர் தனது நாட்டிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை நிறுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு யார் சொல்வதையும் கேட்பவர் அல்ல. டொனால்ட் ட்ரம்ப் சொல்வதை அவர் கேட்பதில்லை. 

மூன்றாம் உலகப் போர் சூடுபிடித்தால் முதலில் எரிபொருட்களின் விலையே அதிகரிக்கும்.  வழக்கமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில்  110  டொலர் முதல் 150  டொலர் வரை விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது, ரொக்கமாக வாங்கினால்,  110 டொலர் முதல்  120 டொலர் வரை எண்ணெய்யைப் பெறலாம்.

ஆனால் நாம் கடன் வாங்கினால், ஒரு பீப்பாய் எண்ணெய் 150 டொலராக உயரும். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் எப்படியோ 300 டொலராக உயர்ந்தால், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 செலவாகும்  ஒரு லீற்றர் டீசலும் அதற்கு அருகில் விலைக்கு வரும். 

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் எரிபொருளில் இயங்குகிறது. எண்ணெய் விலை அதிகரித்தால், உலகப் பொருளாதார வழிமுறை அங்கேயே நின்றுவிடும். ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல்-கமேனியைக் கொல்ல வேண்டாம் என்ற டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோள் மிக முக்கியமான கோரிக்கை என்று சொல்ல வேண்டும். 

அல்-கமேனியைத் தொட்டால், முழு ஈரானும் ஈரானை ஆதரிக்கும்  அனைத்து நாடுகளும் தங்கள் கைகளில் கிடைக்கும் அனைத்தையும் கொண்டு  வரும். இங்கிருந்து, ஒரு இரத்த ஏரி தொடங்குகிறது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் நிறைய இரத்தம் சிந்துவார்கள். 

ஆயத்துல்லா அல்-கமேனி முகமதுவைப் போல, ஒரு நபி அல்ல, ஆனால், அவர் உலகெங்கும் மதிக்கும் ஆன்மீக தலைவராக நீண்டகாலமாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அவர் மீது கையை வைப்பது. உலக முஸ்லிம்கள் வித்தியாசமான கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .