Janu / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு விலங்குக்கும் அதன் சொந்த உரிமைகள் உள்ளன. வீட்டு விலங்குகள், பண்ணை விலங்குகள், சிறைபிடிக்கப்பட்ட விலங்குகள், காட்டு விலங்குகள், மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகள், நீர்வாழ் விலங்குகள், சுதந்திரமாக வாழும் விலங்குகள் மற்றும் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகள் அடங்கும்.
நாம் வீட்டில் வசிக்கும் நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளுக்கு மட்டுமல்ல, யானைகள், புலிகள், கரடிகள், மீன்கள், பறவைகள் போன்ற அனைத்து விலங்குகளுக்கும் இந்த உலகில் வாழ மனிதர்களைப் போலவே உரிமைகள் உள்ளன. ஆனால் மிகச் சிலரே விலங்கு உரிமைகள் பற்றி குரல் எழுப்புகிறார்கள்.
விலங்குகளை கொடுமைப்படுத்துவதைத் தடுக்க இலங்கையில் பல்வேறு சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "எந்தவொரு நபரும் கொடூரமாகத் தாக்குதல், தவறாக நடத்துதல், அலட்சியம் செய்தல், ஒரு வாகனத்தில், கூடையில் கொண்டு செல்வது, வலியை ஏற்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விலங்குகளை கொடுமைப்படுத்துகிறார்."
கர்ப்பிணி விலங்குகளைக் கொல்வது, அவற்றைப் பிடிக்க பொறிகளை வைப்பது, சட்டவிரோதமாக பறவைகளை சிறைபிடித்து வைத்திருத்தல், – நோய்வாய்ப்பட்ட அல்லது ஊனமுற்ற விலங்குகளை பொது இடங்களில் இறக்க அனுமதித்தல், விலங்குகளை கைவிடுதல், தகுதியற்ற நபர்களால் சிகிச்சையளித்தல், சட்டவிரோதமாக விலங்குகளை கருத்தடை செய்தல் அல்லது கருத்தடை செய்தல் ஆகியனவும் விலங்குகள் கொடுமைக்கு கீழே அடங்கும்.
ஒரு விபத்தில் நாயும் ஒருவரும் இறந்துவிட்டால், அந்த நபருக்காக வழக்குத் தொடர்வோர், அந்த நாய்க்காக சட்டரீதியான நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை. எனினும், மஹரகம பகுதியில் வளர்ப்பு நாயை, தன்னுடைய காரில் வேண்டுமென்றே அடித்துக்கொன்ற பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இந்நிலையில்தான், மிஹிந்தலை சீப்புக்குளம பகுதியில் காயமடைந்த காட்டு யானைக்கு எரியும் தீப்பந்தங்களைப் பயன்படுத்தி தீ வைத்து கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளனது. மனிதாபிமானமே இல்லாத இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த யானைக்கு ஒரு கண் தெரியாது என்றும் கூறப்படுகின்றது.
யானை தீப்பந்தங்களால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தை ஒருவர் வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை அடுத்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனினும், வீடியோ எடுக்கும் போதே, அச்சம்பவத்தை உரிய தரப்பினருக்கு அந்த நபர் அறிவித்திருந்தால், தீக்காயங்களுடன் அந்த யானையை காப்பாற்றியிருக்கலாம் அந்தளவுக்கு ஒருசிலருக்கு புத்தியில்லை என்றே கூறவேண்டும். என்பதுடன், விலங்குகளை கொடுமை படுத்துவோருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம்.
இலங்கையில் விலங்கு வதையைத் தடுப்பதற்கு தற்போதுள்ள சட்டங்களை அமல்படுத்துவது மிகப்பெரிய தடைகளில் ஒன்றாகும். காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு பெரும்பாலும் விலங்கு வதை வழக்குகளைக் கையாள பயிற்சி, வளங்கள் மற்றும் அர்ப்பணிப்பு இல்லை. பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் போகின்றன,
இலங்கையில் ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல அமைப்புகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அயராது உழைத்து வருகின்றன. விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விலங்குகள் மீது இரக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் சட்ட சீர்திருத்தத்திற்காக பிரச்சாரம் செய்தல் ஆகியவை மாற்றத்தை ஏற்படுத்தும்.
19.12.2025
17 minute ago
19 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
33 minute ago