Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் கூறியுள்ளார். எனினும், புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன.
பெற்றோர்கள், வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனர். இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டன.
எனினும், மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
தொழில்நுட்பத்துடன் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு, பண்டைய காலங்களிலிருந்து சமூகத்தில் நிலவும் மதிப்பு அமைப்புகளை எவ்வாறு சேதப்படுத்துகிறது என்பதை நாம் காணலாம். மேலும், பரபரப்பான சமூக மற்றும் பொருளாதார முறைகள் நவீன மனிதனை வாசிப்பிலிருந்து விலக்கிக் கொள்ள வழிவகுத்துள்ளன.
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்வதில், நிகழ்நிலை (ஒன்லைன்) கல்வி முறையின் சமூக மயமாக்கல் மற்றும் சமூக ஊடகங்கள் சமூகத்திற்கு அருகாமையில் அதிகரித்து வருவது போன்ற காரணிகளால் இன்றைய சமூகம் வாசிப்பிலிருந்து எவ்வாறு விலகிச் சென்றுள்ளது என்பதைக் காண முடிகிறது.
சமூகத்திலிருந்து வாசிக்கும் பழக்கம் இழப்பு அந்த சமூக கலாச்சாரத்தின் வீழ்ச்சிக்குப் பங்களிக்கும் ஒரு காரணியாகும். “ஒரு கலாச்சாரத்தை அழிக்கப் புத்தகங்களை எரிக்க வேண்டியதில்லை” என்று ரே பிராட்பரி கூறினார். “மக்கள் அவற்றைப் படிப்பதை நிறுத்தட்டும்.” மேலே குறிப்பிட்டது போல, புத்தகங்களைப் படிப்பதிலிருந்து விலகி இருப்பது சமூக வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாகும்.
வாசிப்பு நல்ல சமூக உறவுகளை உருவாக்கவும் பராமரிக்கவும்
உதவுகிறது. வாசிப்பு மன அழுத்தத்தைக் குறைத்து, மனக் கவனத்தை வளர்க்க உதவுகிறது. சுமார் முப்பது நிமிடங்கள் வாசிப்பது இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் மனச்சோர்வு உணர்வுகளைக் குறைப்பதாக அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. வாசிப்பு மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல மன ஆரோக்கியத்தை வளர்க்கும்.
வாசிப்புக்குப் பழகி, வாசிப்பிலிருந்து பெற்ற அனுபவங்களைத் தொடர்ந்து குவித்துக்கொண்டிருப்பவர்கள், வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை நோக்கி உணர்ச்சிவசப்படாமல், பல சந்தர்ப்பங்களில், தாங்கள் பெற்ற அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை நடைமுறையில் எதிர்கொள்ளும் பழக்கத்தைப் பெறுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட வாசிப்புப் பழக்கத்தை, புதிய அணுகுமுறையுடன் சமூக மயமாக்க வேண்டிய வலுவான சமூகத் தேவை உள்ளது. வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் அது தரும் உடல் மற்றும் மன நலம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
2025.04.23
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
1 hours ago
5 hours ago