2024 மே 04, சனிக்கிழமை

மணவாள கோல விழா...

Janu   / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்ரீ  மாகாவிஷ்ணு ஆலயத்தில் விசேட யாக பூஜையும் வருஷாபிஷேக மணவாள கோல விழாவும் 1008 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேகத்துடன் கூடிய வசந்த மண்டப பூசையும் வெகு சிறப்பாக திங்கட்கிழமை(22) நடைபெற்றுள்ளது .

மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஓராண்டு நிறைவை முன்னிட்டு வருஷாபிஷேக மணவாள கோல விழாவும் இதன்போது வெகு சிறப்பாக நடைபெற்றது. கணபதி ஹோமம் யாக பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பூர்ண கும்பம் எழுந்தருளச் செய்தலுடன் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றுள்ளது .

 பின்னர் வசந்த மண்டப பூசையும் சுவாமி உள்வீதி உலாவருதலும் இடம்பெற்றதுடன் பூசை நிகழ்வுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, மாதவா, மதுசுதனா, நாராயணா, என்ற இறைவன் நாமங்களுடன் மகா விஷ்ணுப் பெருமானை வேண்டி வழிபாடு செய்துள்ளனர் .

இந்த வருஷாபிஷேக 1008 சங்காபிஷேக பூசை நிகழ்வுகளை சப்தரிஷி குருபீட சாகித்திய பாஸ்கர் குமார விக்னேஸ்வர குருக்கள் அவர்களுடைய தலைமையிலான குருமார் மேற்கொண்டுள்ளனர் . 

 வ.சக்தி      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .