2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா...

R.Tharaniya   / 2025 ஜூலை 02 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா  புதன்கிழமை (2) அன்று  மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.

புதன்கிழமை (2)  அன்று காலை 6.15 மணி அளவில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்,மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,குருநாகல் மறை மாவட்ட ஆயர்  அந்தோணி பெரேரா ஆண்டகை , மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்,   மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன்   அடிகளார்,  ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர். 
 
 திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பாவனையும் அதனை தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
 
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் அருட் சகோதரர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று செவ்வாய்க்கிழமை  (01.) அன்று மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்ற நிலையில் புதன்கிழமை (2) அன்று  திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 எஸ்.ஆர்.லெம்பேட்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .