2025 மே 02, வெள்ளிக்கிழமை

தண்டவாளத்தில் கற்களை வைத்த சிறுவன் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவொற்றியூரில், தண்டவாளத்தில் கற்களை வைத்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 அப்பகுதியில் உள்ள சிசிடிவியில்  சோதனை செய்யப்பட்ட போதே,  அப்பகுதியை சேர்ந்த குறித்த 15 வயது சிறுவன் தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விளையாட்டாக தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி, அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தார். 

மேலும் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X