2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் முழுப் போராட்டத்துக்கும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமூக ஆர்வலரான அண்ணா ஹசாரே முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் தொடங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .