2024 மே 02, வியாழக்கிழமை

மாமியார் படுகொலை : வீடியோவால் சிக்கிய மருமகள்கள்

Janu   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஒரு வயதான பெண்ணை,   இரு பெண்களும், ஒரு ஆணும் சேர்ந்து கம்பால் தாக்கும்  காணொளியொன்று வைரலாக பரவியுள்ளது.

 இது தொடர்பில் மேற்கொண்ட பொலிஸ்  விசாரணையில், அந்த வயதான பெண் முன்னி தேவி (வயது 65 ) என்றும்,  அவரை தாக்கியது,  அவரது  மூத்தமகன் மற்றும்  இரு  மருமகள்கள் எனவும் தெரியவந்துள்ளது . இந்த தாக்குதலுக்கு மருமகள்களின் குடும்பத்தினர் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்  வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது .

மேலும் இது  தொடர்பில்  சந்தேக நபர்களான  இரு  பெண்களை  கைது செய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள  ஏனையவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .